Friday, 7 April 2017

பெண்ணாய் இரு

பெண்ணே
நீ பெண்ணாய் இரு

நீ நீயாகவே இரு
உன் தனித்தன்மை இழக்காதே

உன் உரிமையும் உணர்வும்
உனக்கானது
பிறர் அதை நிர்ணயம் செய்ய
இடம் அளிக்காதே

பூவும் பொட்டும்
உடையும் நடையும்
உனக்கானது
கூந்தலை குறைப்பது
சேலை தவிர்ப்பது
விதிமீறலல்ல
அடங்க மறு
அன்புக் கொள்
அடிமையில்லை என்றுணர்த்து

ஆளுமை கொள்
ஆங்காரம் தவிர்
உடமையிலும்  உளமையிலும்
உன்னிலையை கொள்

இங்கு எதுவும் அடிமையில்லை என்றுணர்த்து
சமைப்பது   துவைப்பது
ஈன்றெடுப்பது
இயல்பு - ஆனால் அஃது கட்டாயமுமில்லை

பெண்கள் இயந்திரமுமில்லை
பூனைக்கு எலி
அடிமையில்லை
சமஸ்கிரதத்திற்கும் தமிழும்
அடிமையில்லை

உறவுகளில் யாரும் யாருக்கும் அடிமையில்லை
உணர்வுகளும் கருத்துக்களும் அடிமையில்லை
பெண்ணும் ஆணுக்கு அடிமையில்லை
அனைத்து சமம் என சண்டைக் கொள்

அதிகாரத்திற்கு அடங்காதே
ஆண் வர்க்கத்தித்கு நிகரென்று
உறுதி கொள்!!!!

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...