Sunday, 9 April 2017

மீசை வெறும் மயிர்தான்...

                          
முகத்தில் சின்னதாய் 
அரும்பு மீசை
நான் ஆம்பள என்று
நினைவுறுத்தியது....

மீசை முளைத்த
எனக்கும்
மீசையோடு இருக்கும்
அப்பாவிற்கும்
இடைவெளி உண்டானது....

மீசை முளைத்த நான்
மீசை இல்லாத அம்மாவுக்கு அந்நியமானேன்
இடைவெளியை நானே உருவாக்கிக் கொண்டேன்....

மீசை இல்லாத அம்மாவை
எனது அதிகார குரல்
ஆளுமை செய்தது
அப்பாவின் பாணியில்....

அக்காவும் தங்கையும் கூட
என்னிடம் பணிந்துதான் போகனும்
அவர்கள் முகத்தில் மீசை இல்லாததால்....

காதலிக்கூட என் மீசைக்கு 
அடங்கித் தான் போகனும்
ஆணின் ஆளுமைக்கும்
ஆதிக்கத்துற்கும்
மீசைதானே சான்றிதழ்....

பெண்கள் என்னிடம் அடங்கிதான் போகனும்
மீசை முளைத்த என்னிடம்
அடிமைப்பட்டுதானே இருக்கனும்....

மீசை முளைத்த என்னிடம்
ஆம்பள திமிரும் துளிர்விட்டது....

ஆம்பளையான என்னிடம்
ஆணாத்திக்கமும் திமிரும்
ஆட்கொண்டது பெருமிதமாய்....

பெண்மையை அடிமை செய்யும் "மீசை" வீரத்தின் அடையாளமில்லை
ஹோர்மனின் மாற்றம்.....

அட போங்கடா...
பெண்ணியம் அடிமைப்படுத்தும் "மீசை"ஆளுமைக்கு உரிதானதால்ல
அஃது
ஆணவத்தின் சின்னமும் இல்லை....

மீசை என்பது வெறும்
மயிர்தான்!!!

No comments:

Post a Comment

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!!

மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி!! மலேசியாவில் வாழ்ந்த வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்திர இடத்தை தங்களின் தனி...